Sunday 26 August 2012

தேசாந்திரி

நான் வாசிக்க வேண்டும் என் அதிகமாக விரும்பிய எஸ்.ரா வின் புத்தகம் தேசாந்திரி. ஆனால் இலங்கையில் அப்புத்தகத்தை பெறுவது கஸ்ரமாகவே இருந்தது. எப்ப கடைக்கு போனாலும் தேசாந்திரியை தேடி தோல்வியடைவததே என் வேலை. இந்த தடவை இன்ப அதிர்ச்சியாக தேசாந்திரியை கண்டடைந்தேன்.அப்பிடி ஒரு சந்தோசம்.வீட்டிற்கு வந்ததுமே வாசிக்க தொடங்கிவிட்டேன்.ஆனால் ஒரே மூச்சாக வாசிக்க விரும்பவில்லை. அணுஅணுவாக ரசித்து நீண்ட‌ நாள் அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் எவ்வளவு ரசித்தாலும் இரு நாட்களில் முடிந்துவிட்டது. மீண்டும் வாசிக்க வேண்டும்.எஸ்.ரா தான் பயணம் செய்த ஊர்களில் பெற்ற அனுபவங்கள் மற்றும் அவ் இடங்களின் வரலாறு  போன்றவற்றை  சுவைபட எழுதியுள்ளார்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சென்றது, நல்லதங்காள் கிணறு பார்க்க சென்றது,சமண படுகைகள் பார்க்க சென்றது,காந்தள் மலர் பாக்க சென்றது என தன் எழுத்து மூலம் அவ் இடங்களுக்கு எம்மையும் அழைத்து செல்கிறார்.
நாகப்பட்டினம் சென்ற அனுபவத்தை அழகாக எழுதியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய கட்டுரையில் அக்கோயிலை பார்க்க வரும் உள் நாட்டினரை விட வெளி நாட்டினரே அதிகம் என்று கூறி சிற்பங்களில் நமக்கு இருக்கும் அக்கறையின்மை பற்றி ஆதங்கப்படுகிறார்.  ஒவ்வொரு கட்டுரைக்கும் பொருத்தமானதாக ஆரம்பத்தில் பல கவிஞர்களின் கவிதைகள் அழகூட்டுகின்றன. இப்படி  41 கட்டுரைகள்.

வாசிக்கும் போதே அவ்விடங்களுக்கு நானும் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அத்தோடு நமக்கு முன்னால் இருக்கும் எவ்வளவு அழகான விடயங்களை நாம் கவனிப்பதே இல்லை என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது. 

1 comment:

  1. எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம். பல முறை வாசிப்பிற்குப் பின்னும் சலிப்பு ஏற்படுத்தாத எழுத்து நடை. சாரநாத் அனுபவம், குற்றாலம்...

    நான் ரசித்த பக்கங்கள் இதோ

    http://pinnokki.blogspot.in/2012/08/blog-post_26.html

    ReplyDelete