Sunday 23 February 2020

(83)காந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராவின் கட்டுரைகள், நாவல்கள் விரும்பி வாசித்தாலும் சிறுகதைகள் பெரிதாக வாசித்தது இல்லை. இப் புத்தகத்தில் 13 சிறுகதைகள் உள்ளன. முதல் கதை 'காந்தியோடு பேசுவேன்'. ஏற்கனவே வாசித்ததாக நினைவு. அருமையான கதை. பெண்கள் ஏன் காந்தியை விரும்பினார்கள் என்பதை இக்கதை மூலம் புரிந்து கொள்ளலாம். காந்தியையும் புரிந்து கொள்ள உதவும்.காந்தியை நேரில் சென்று சந்தித்த கதை சொல்லியின் அம்மாவினூடாக காந்தி காலத்தையும் தற்காலத்தையும் இணைத்து எழுதப்பட்ட கதை. காந்தி பற்றிய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை.
பாதியில் முடிந்த படம், அருவிக்கு தெரியும், ஷெர்லி அப்படித்தான் போன்ற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எஸ்.ராவின் சிறுகதைகள் தொடர்ந்து வாசிக்க  வேண்டும் என்ற ஆர்வத்தை இப் புத்தகம் தந்துள்ளது.