Sunday 13 December 2015

(40) நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன்

எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் கட்டுரைத்தொகுப்பு.

நாஞ்சில் நாடனுக்கு சுந்தர ராமசாமி, நகுலன் போன்றவர்களுடன் இருந்த நெருக்கத்தை பற்றி சிறப்பான இரு கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சுந்தரராமசாமி தனது நாவலான "தலைகீழ் விகிதங்கள்" இற்கு மதிப்புரை எழுதியது பற்றியும் நாஞ்சில் நாடனுக்கும் நீல. பத்மநாபனுக்கும் பொதுவான குணங்களைக் குறிப்பிட்டது பற்றியும் சுவையாக எழுதியுள்ளார். வண்ணதாசன் பற்றிய கட்டுரையில் அவரது கதைகள் அன்பு பற்றியதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் சிறுகதைகளின் சிறப்புக்கள், அவற்றின் மீது கூறப்படும் விமர்சனங்கள் பற்றியும் குறிப்பிட்டுளார்.

தனது எழுத்துக்கள், சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றின் பின்புலங்களைப் பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்கள் நாஞ்சில் வட்டார வழக்கில் இருப்பதால் வாசிக்க கடினமானது என‌ விமர்சிப்பவர்கள் உண்டு. அது தொடர்பான தனது கருத்துக்களைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மது தொடர்பாக எழுதப்பட்ட  "நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று" என்ற கட்டுரை வாசிப்பவர்களுக்கு புன்னகையையும் அதே நேரத்தில் கவலையையும் தரக்கூடியது. அத்துடன் சுவடு, வன்மம், நீலகிரி அடுகுகளில் மூன்று நாட்கள்  என மொத்தமாக 17 கட்டுரைகள் உள்ளன.

No comments:

Post a Comment