Wednesday 16 December 2015

(43) உயரப்பறத்தல் - வண்ணதாசன்

வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு. இதுவே நான் வாசித்த முதல் வண்ணதாசன் புத்தகம். அவரை மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டது இந்த புத்தகம். "சிறுகதை என்றாலே கதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்" என்று அண்மையில் வாசித்த வரி எனக்கு வாசிப்பின் புதிய கோணத்தைக் காட்டியிருக்கிறது. நானும் சிறுகதை என்றால் அதில் கதை என்ன என்று தேடியே  வாசித்திருக்கிறேன். கதை என்று பெரிதாக எதுவும் இல்லாமல் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக சிறுகதை இருக்க முடியும் என்று இப்புத்தகத்தை வாசிக்கும் போது தெரிந்தது. என்ன ஒரு நுணுக்கமான சித்தரிப்புகள். அப்படியே மனதில் பதிந்து போகக்கூடியவை.

நாம் வாழ்க்கையை இப்படியெல்லாம் ரசிக்கவில்லையே என எண்ண வைக்கும் படி வர்ணனைகளை அமைத்திருக்கிறார். கதைகளை வாசிக்கும்போது நானும் மாறிவிடுவது போல தோன்றுகிறது. அவர் வாழை மரத்தை தொட்டு பார்க்க வேண்டும் என்று எழுதியதை வாசிக்கும் போது எமக்கும் தொட வேண்டும் என்ற ஆசையை அவர் எழுத்துக்கள் கொண்டுவந்துவிடுகின்றன. மொத்தமாக 17 கதைகள். எல்லாமே சிறப்பானவை தான்.

No comments:

Post a Comment