
இந்நாவல் அனந்த நாயரின் பார்வையில் சொல்லப்படுகிறது. தன்னையும்,தன் இரு குழந்தைகளையும் விட்டு விக்கிரமன்தம்பியை மணந்த மனைவி கார்த்திகாயினியின் நினைவுகளை மறக்க முடியாது வாழும் அனந்தன் நாயரின் மனவோட்டத்தை, அவர் பார்வையில் சொல்லுகின்றது இந்நாவல்.
உரிய முறையில் கிடைக்காத பதவி உயர்வைப் பெற்றுக்கொள்கிறார் அனந்தன் நாயர். தன் பதவி உயர்வுக்கு கார்த்திகாயினி மேல் விக்கிரமன்தம்பி வைத்த கண் தான் காரணம் என்று தெரிந்தும் அவரால் ஊரில் பெரிய பதவியில் இருக்கும் விக்கிரமன்தம்பியை எதிர்க்க முடியாமல் இருக்கிறது. எல்லாக் கோபங்களையும் கார்த்திகாயினி மேல் காட்ட வீட்டில் எப்போதும் சண்டை. ஒரு கட்டத்தில் கார்த்திகாயினி விக்கிரமன்தம்பியுடன் சென்றுவிட தன் இரு பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்க்கிறார். விக்கிரமன்தம்பிக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு. கார்த்திகாயினி விக்கிரமன்தம்பியுடன் சந்தோஷமாக எல்லாம் வாழவில்லை.
நாவலின் இறுதியில், அனந்தன் நாயருக்கும் மகள் மாதவிக்குட்டி, மகன் பிரபாகரன் நாயருக்கும் இடையெ நடைபெறும் உரையாடல் முக்கியமானது. மகன் பிரபாகரன் நாயர் தன் தாயின் அனைத்து துன்பங்களுக்கும் அனந்தன் நாயரே காரணம் என்கிறான். மகள் மாதவிக்குட்டி அனந்தன் நாயருக்கு ஆதரவாக வாதாடுகிறாள். ஆரம்ப வாசிப்பில் சிறு சலிப்பை தரும் நாவல், சிறிது பக்கங்கள் தாண்டியதும் நம்மை உள்ளிளுத்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment