Saturday 18 April 2020

(86) எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ரா இந்த புத்தகத்தில் தனது குடும்பம், நண்பர்கள், பள்ளி நாட்கள் என சிறு வயது முதல் தனது அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார்.பழைய புத்தகக்கடை பற்றி அவரது எழுத்துக்களில் எப்போதுமே வாசிக்கலாம். அவருக்கு பிடித்த இடங்களில் ஒன்று அது. வாழ்வில் சில உன்னதங்கள் என்ற கட்டுரையில் பழையபுத்தகக் கடையுடனான தனது அனுபவங்களை எழுதியுள்ளார். அந்த தலைப்பே ஒரு புத்தகத்தைப்பற்றியது தான்.விட்டல் ராவ் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாசித்து இருக்கின்றேன். இளையராஜாவின் பாடல்களுக்கு தான் மிகவும் ரசிகன் என்பதையும் இளையராஜாவை சந்தித்த அனுபவங்களையும் இளையராஜாவின் ரசிகன் என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். நயகரா முன்னால் என்ற கட்டுரையில் நயகராவை சென்று பார்த்ததை அங்கு ரசித்தவற்றை பற்றி எழுதியுள்ளார். ஜப்பானில் சில நாட்கள் என்ற ஜப்பானைப் பற்றிய ஒரு பெரிய கட்டுரையும் உண்டு. பார்த்தவற்றை மட்டும் எழுதுவது சிறந்த பயணக் கட்டுரையாக அமையாது. அவர் ஜப்பானின் பண்பாடு, வரலாற்றுடன் எழுதியவற்றை வாசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அவரது ஏனைய கட்டுரைகள் போலவே இந்த தொகுப்பும் மிக முக்கியமானது.மொத்தமாக 30 கட்டுரைகள் கொண்ட சிறந்த புத்தகம்.

No comments:

Post a Comment