Saturday 18 April 2020

(84) எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

உயிரினங்கள் மேல் ஈடுபாடுள்ள ராமும் அவர் மனைவி ஜானகியும் பெரும்பாலும் காடுகளில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது வீடும் காட்டுக்கு அருகில் தான் இருக்கிறது.பாம்பு, முதலை,சிறுத்தை கூடவே வாழ்ந்த அவர்களது வாழ்க்கை பிரமிப்பாக இருக்கிறது. இந்த புத்தகத்தை ஜானகி தான் எழுதியுள்ளார். ராம் ஒரு அமெரிக்கர். ஆனால் இந்தியாவில் தான் சிறு வயது முதல் அவரது தாயாருடன் வாழ்ந்திருக்கின்றார். இந்தியக் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்திருக்கின்றார். பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார். 


அவர்களுக்கு பாம்பு, முதலைகளைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கின்றது. பாம்புகளை எவ்வாறு இனம் காண்பது, எந்த வகைப் பாம்புகள் எங்கு இருக்கும் என எல்லாமே விரிவாக பதிவு செய்துள்ளார். இருவருமே ஒரு சாகச வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள்.முள்ளம்பன்றியை , பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார்கள் என்றால் சும்மாவா. அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் மிருகங்களுடனும் பறவைகளுடனும் தான் மனிதர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. விலங்குகளால் ஏற்பட்ட தொல்லைகளையும் சுவைபடக் கூறியுள்ளார். ராம் இந்தியாவின் முதலைகள், பாம்புகளின் பாதுகாப்புக்காக நிறைய பாடுபட்டுள்ளார். இந்திய அரசின்  பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.எமக்கு வெளியே எவ்வளவு பெரிய உலகம் இருக்கின்றது என வியக்க வைத்த புத்தகம்

No comments:

Post a Comment