Monday 22 April 2019

(78) கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும் - சு.கி . ஜெயகரன்

சு.கி . ஜெயகரன் எழுதிய இந்த நூல் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று. ஆராய்ந்து நுண்ணிய தகவல்களுடன் இந்த நூலை எழுதியுள்ளார். 
ஹிபாகுஷாக்கள் எனப்படும் அணுக்குண்டு தாக்குதலால் யப்பானில் பாதிக்கபட்டவர்கள் பற்றிய கட்டுரையில் இன்று வரையில் அவர்கள், அவர்களது  சந்ததிகள் அடைந்து வரும் துன்பங்கள் என்பவற்றை வாசிக்கும் போது இரண்டாம் உலகப்போரில் அணுக்குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடு என்பதைத்தவிர  பாடப்புத்தகத்திற்கு அப்பால் பெரிதும் தெரிந்து கொள்ளாமல் இருந்ததையிட்டு குற்ற உணர்வாக இருந்தது. ஒரு தம்பதியினர் 2 வயது பெண் குழந்தையுடன் ஒன்றரை கிலோமீற்றர் தள்ளி இருந்ததால் உயிர் பிழைத்தனர். 12 வயதானபோது  கழுத்திலும் காலைச்சுற்றியும் வீகமும் உடலில் நீலப்புள்ளிகளும் தோன்ற, கதிர் வீச்சால் உண்டான புற்று நோய் எனக்கண்டறியப்பட்டது.அவரின் மீது அக்கறை கொண்ட ஒருவர் 1000 நாரை மாலை (யப்பான் மொழியில் சென்பாசுரு)செய்யும் படி கூறியுள்ளார். நாரை நீண்ட ஆயுளின் சின்னமாக யப்பானில் நம்பப்படுவதால் ஒரிகாமி முறையில் நாரைகள் செய்து மாலையாக கோர்த்தால் பிணியுள்ளவர் குணமடைவார் என நம்பப்படுகிறது. சதாகோ என்ற அச்சிறுமி தானும் தன் போன்ற இளம் ஹிபாகுஷாக்களும் குணமாக வேண்டி காகித நாரைகளை உருவாக்கும் போது 644 ஆவது நாரை செய்து முடித்த அன்று அவர் இறந்தார்.அவரது நினைவிடத்தில் பல சென்பாசுரு குவிந்திருக்கின்றன. தன்னை மிகவும் பாதித்த நினைவுச் சின்னம் அது என எழுதுகிறார்.

அந்தமான் - நிகோபார் தீவுகளில் உள்ள பூர்வ குடிகள், எரிமலை வெடிப்பு ,சாவுப்பள்ளத்தாக்கு, சித்திரக்கதைகளில் காணப்படும் இனவெறி, ஆவுங் சான் சூசி, வங்காரி மாதய் போன்ற சமூகப் போராளிகள் பற்றி பல முக்கிய நிகழ்வுகளை இந்த நூலில் படிக்கலாம்.

No comments:

Post a Comment