Sunday 15 May 2016

(54) மதுரா விஜயம் - ஸ்ரீவேணுகோபாலன்

'திருவரங்கன் உலா' வின் தொடர்ச்சியே 'மதுரா விஜயம்'. வீரவல்லாளன் யுத்தத்தில் தோல்வி அடைந்ததால் அரங்கன் விக்கிரகத்தை மீண்டும் மேல்க்கோட்டைக்கு எடுத்துச் செல்வதுடன் 'திருவரங்கன் உலா' முடிவடைகிறது. மதுரா விஜயம் மீண்டும் அரங்கனை  ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளச் செய்யும் முயற்சிகள்  தொடர்பான நாவல்.

குலசேகரனின் மகன் வல்லபன் , அவனது நண்பன் தத்தன் அரங்கனைத் திருப்பதியில் காட்டுப்பகுதியில்  கண்டுபிடிக்கிறார்கள். சித்தப்பிரமை பிடித்த கொடவர் ஒருவர் அரங்கனைப் கவனமாகப் பேணிப்  பாதுகாக்கின்றார். அரங்கனை கோபண்ணர் உதவியுடன் திருப்பதியில் எழுந்தருளச் செய்கின்றனர். கம்பண்ணர் சுல்தானுக்கு எதிராக போர் செய்து வெற்றி பெறுகின்றார். அரங்கன்  திருப்பதியில் இருந்து மீண்டும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளுகின்றார்.

அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளச் செய்வதில் விஜயநகர அரசர்  கம்பண்ணர் மற்றும் அமைச்சர்  கோபண்ணர் போன்றோர் முக்கிய பங்காற்றுகின்றனர். கம்பண்ணரின் மனைவி கங்கதேவி ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் கம்பண்ணர் பதினான்காம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு நோக்கி படையெடுத்து சம்புவரையர்களையும் மதுரை சுல்தானையும்  வீழ்த்தி வெற்றி பெற்றதை பதிவு செய்துள்ளார். இன்று கங்கதேவி எழுதிய நூல் பல வரலாற்று நிகழ்வுகளை அறிய உதவியாக இருக்கின்றது. அந்த நூலின் தலைப்பையே ஸ்ரீவேணுகோபாலன் அவர்களும் தனது நூலுக்கு பயன் படுத்தியுள்ளார்.
அரங்கனின் வரலாறு அறிய விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நூல் மதுரா விஜயம் ஆகும்.

No comments:

Post a Comment