Friday 22 January 2016

(48) கிரௌஞ்சவதம் - வி.ஸ. காண்டேகர்

காண்டேகர் மராட்டிய எழுத்தாளர். அவரது  பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ.  கிரௌஞ்ச வதமும்  கா. ஸ்ரீ. ஸ்ரீ யாலேயே அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே மூலமொழியில் வெளியாகியிருக்கின்றன. அந்த அளவுக்கு தமிழ் வாசகர்களுக்கு காண்டேகர் பரிச்சயமானவர்.




முன் இணை யாகிய அன்றிலின்
மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
மன் நெடு நாள் இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!

வால்மீகியின் உத்தர ராமசரிதப் பாடல் இது. இப்பாடலே நாவலுக்கு ஆதாரமானது.

அப்பண்ணாவின் ஒரே புதல்வி சுலோசனா. நன்கு படித்தவள், திறமையானவள்.  அவளது இளவயது தோழன் திலீபன் எனப்படும் தினகரன். காந்திய ஈடுபாடு உள்ளவன். மக்களுக்காகவே சிந்தித்து வாழ்பவன். சுலோவின் கணவன் பகவந்தராவ் மகாராஜாவின் வைத்தியர். மகாராஜாவின் தயவில் படித்து அவரது அரண்மனை வீட்டிலேயே வாழ்கிறான். இவர்களுக்கிடையே பின்னப்பட்ட கதை கிரௌஞ்சவதம்.

காந்திய சிந்தனைகள் , காளிதாசரின் மேகதூதம் என்பவற்றையும் இடையிடையே வாசிக்க முடியும். இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரும் புத்தகம்.

No comments:

Post a Comment