Sunday 24 December 2017

(73) புதையல் புத்தகம் - சா.கந்தசாமி

புதையல் புத்தகத்தில் 47 புத்தகங்களை எழுத்தாளர் சா.கந்தசாமி அறிமுகம் செய்துள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை நாட்குறிப்பு, சங்க இலக்கியத்தில் தாவரங்கள், நடந்தாய் வாழி காவேரி என பெரும்பாலான புத்தகங்கள் ஏற்கனவே அறிந்தவை தான். இருந்த போதும் சில புத்தகங்களைப் பற்றிய எழுத்தாளரின் குறிப்புகளை வாசிக்கும் போது அப்புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. எஸ்.ராமகிருஸ்ணன், ஜெயமோகன் , க.நா.சு போன்றவர்கள் புதிய வாசகர்களுக்காக முக்கிய புத்தகங்களை அறிமுகம் செய்து எழுதிய புத்தகங்களை வாசித்து இருக்கிறேன். அக்கட்டுரைகளில் உள்ள ஆழமும் விரிவும் இக்கட்டுரைகளில் இல்லை. இருந்த போதும் புத்தகங்களை வாசிப்பதற்கு தேர்ந்தெடுப்பதில் புதையல் புத்தகம் ஒரு வழிகாட்டியாக அமையும்.

No comments:

Post a Comment