Thursday 1 September 2016

(59) தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்

எனது விருப்ப்பத்திற்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம். அவரது கதைகளில் வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். சோகத்தைக்கூட ஒரு வித சுவையுடன் சொல்லிவிடுவார்.  'தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை' என்ற புத்தகத்தில் அவரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெயமோகன் உட்பட ஏழு பேர் அவரிடம் பெற்ற நேர்காணல்கள் உள்ளன. அவரது பரந்த வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மோனலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது என்ற தலைப்பில் அமைந்த மதுமிதாவால் எடுக்கப்பட்ட நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

அவரது சிறு வயது அனுபவங்கள், கதைகள், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அனுபவங்கள், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களது முக்கிய புத்தகங்கள், எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள் என பல விடயங்களை இந்த நேர்காணல்கள் மூலம் அறிய முடியும். சிறந்த புத்தகம் ஒன்றை வாசித்த திருப்தி கிடைத்தது.

No comments:

Post a Comment