(2) என் ஜன்னலுக்கு வெளியே -மாலன்
என் ஜன்னலுக்கு வெளியே -மாலன்
இது ஒரு கட்டுரை தொகுப்பு. மாலன் எழுதி வெவ்வேறு இதழ்களில் வெளியானவை.அரசியல், சமூகம்,இலக்கியம்,தமிழ்,இரங்கல் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுளன. இலக்கியம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றவையுடன் ஒப்பிடும் பொழுது அதிக சுவாரசியமாக இருக்கிறது. யானைக்கு இறக்கை வெட்டப்பட்ட கதையை சொல்லும் " கால் இல்லாத கதைகள்" நடிகர் நாகேஷ் பற்றிய "வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல" போன்றவற்றை கூறலாம். அலெக்சாண்டர் நண்பன் அரிஸ்டிப்பஸ் மூலம் டையோஜெனீஸ் இற்கு கடிதம் எழுதிய ஒரு நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். டையோஜெனீஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் பகுதி கொஞ்சம் bore ஆக தான் இருந்தது. இந்த வாரிசு அரசியல், காவிரி பிரச்சினை என்று ஏற்கனவே அடிக்கடி வாசிக்கப்பட்ட விடயமாக இருந்ததாலோ தெரியவில்லை.நான் கடைசியில் இருந்து முன் நோக்கி தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். அப்படி வாசிப்பது இது தான் முதல் தடவை. முதல் சில கட்டுரைகள் வாசிக்க பெரிதாக நன்றாக இருக்கவில்லை. அதனால் நேராக இலக்கிய பகுதிக்கு தாண்டி, அப்படியே பின் முன்னாக நகர்ந்து கடைசியாக அரசியல் பகுதிக்கு வந்தேன்.
அரசியல் பகுதியில் குறிப்பாக சொல்வதென்றால் டொக்டர் வினாயக்(Binayak Sen)பற்றிய "தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?" என்ற கட்டுரை. வங்காளியான வினாயக் பெரிய இடங்களில் கிடைத்த வேலைகளை விட்டு விட்டு, மருத்துவ வசதி இல்லாத இடம் ஒன்றில் சேவை செய்தவர். அம் மக்களுக்கும் நிறைய விதங்களில் உதவியவர். கனிம வளம் நிறைந்த பர்சார் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை அகற்றி அந்த நிலங்களை நிறுவனங்களுக்கு கொடுத்த அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.இது போன்ற வேறு சில நடவடிக்கைகளையும் மக்களுக்காக செய்திருக்கிறார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.இது 2008 இல் எழுதப்பட்ட கட்டுரை. அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்று தேடிப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment